(நெவில் அன்தனி)
இஸ்லாமாபாத்தில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதென்ற உறுதியை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அளித்துள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
SLC தலைவர் மற்றும் தலைமை பயிற்றுநர் சனத் ஜயசூரிய ஆகியோருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை தொடருமாறு இலங்கை அணிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் பாதுகாப்பு செயலாளர் சம்ப்பத் துய்யகொன்த நேரடியாகப் பேசியதன் பலனாக, வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சிறப்பு பாதுகாப்பு உட்பட அணியை சூழ பாதுகாப்பு படை அதிகாரிகளின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி, இலங்கை வீரர்களை நேற்று இரவு சந்தித்து அவர்களது உயிர்பாதுகாப்பு கரிசணைகளை நிவர்த்தி செய்வதாகவும் அவர்களைப் பாதுகாப்பதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பினர் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் உறுதி வழங்கினார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM