சமந்த வித்யாரத்ன ஊடங்களுக்கு குறிப்பிட்ட கருத்துக்களால் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - எஸ்.எம்.மரிக்கார்

13 Nov, 2025 | 12:56 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடைபெற்ற இரகசிய கலந்துரையாடலில் தொடர்பில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஊடங்களுக்கு குறிப்பிட்ட கருத்துக்களால் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய்ந்து உரிய  நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சபாநாயகர் தலைமையில்  2025.10.31 ஆம் திகதியன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்   எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கலந்துரையாடல்  நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில்  எதிர்கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துக் கொண்டிருந்தனர்.இந்த கலந்துரையாடலில் பங்கேற்காத பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற  உறுப்பினர்களின் சிறப்புரிமையின்  நிலையியற் கட்டளையின் பிரிவுக்கமைய,  அமைச்சர்  சமந்த வித்யாரத்னவின் கருத்தினால்  எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளதால் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த சிறப்புரிமை மீறல் குறித்து ஆராய்ந்து முறையான நடவடிக்கை எடுங்கள் என்று வலியுறுத்துகிறேன். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போது சமந்த வித்யாரத்ன ' தேவையாயின் சபாநாயகரிடம் சென்று கேளுங்கள்  ' என்று குறிப்பிட்டுள்ளார். நீங்கள் (சபாநாயகர்) அவருக்கு இரகசிய விடயங்களை குறிப்பிட்டதை போன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் பத்தரமுல்ல அலுவலகத்தின் சபாநாயகர் என்ற முத்திரையை நாங்கள் பதிக்கவில்லை. ஆளும் தரப்பினர்கள்  தான் அவ்வாறான நிலையை ஏற்படுத்துகிறார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35