எம்மில் சிலருக்கு அவருடைய நண்பர்களின் பரிந்துரையின் பேரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அவர்களுடைய திறமையின் காரணமாக வேலை வாய்ப்பு தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ கிடைக்கும்.
சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தாலும்.. கடின உழைப்புக்கு ஏற்ற வகையில் ஊதியமோ பாராட்டோ அங்கீகாரமோ கிடைப்பதில்லை. இதற்கு காரணம் சனி பகவானின் தோஷம் அல்லது அவரின் பரிபூரண அருள் கிடைக்காத நிலை என குறிப்பிடலாம்.
இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வேலை வாய்ப்பு பெற்று அதில் கடினமாக உழைப்பதற்கு ஏற்ற வகையில் ஊதிய உயர்வையும், பணி பாதுகாப்பையும், கௌரவமும் கிடைப்பதற்கான சூட்சமமான வழிமுறை ஒன்றை பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து கடைபிடிக்கும் போது வாழ்வில் நடைபெறும் அதிசயங்களை அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : கரும்பு -செவ்வாழை பழம்- மாதுளம் பழம்.
உங்களது வீட்டிற்கு அருகே உள்ள குளத்தில் உள்ள மீன்கள் அல்லது அருகே உள்ள ஆலயத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காக இடம்பெற்றிருக்கும் யானை, அதே ஆலயத்தில் ஆலய வளாகத்தில் பராமரிக்கப்படும் குரங்குகள்... இந்த மூன்று ஜீவராசிகளையும் நீங்கள் ஏதேனும் அதற்குப் பிடித்த உணவு பொருட்களை சனிக்கிழமைகளில் தானமாக வழங்கி வந்தால்... உங்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் பொருளாதார மேம்பாடும் ஏற்றும் பெறுவதை காணலாம். குறிப்பாக மீன்களுக்கும், குரங்குகளுக்கும் மாதுளை பழ முத்துகளையும், யானைகளுக்கு கரும்பையும், செவ்வாழைப்பழங்களையும் உணவாக வழங்கி வந்தால்... உங்களுடைய சனி பகவானின் கர்மவினை குறைந்து அவரின் பரிபூரண அருள் கிடைக்க பெறுவீர்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM