லங்கா பிரிமியர் லீக் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட தமீம் ரஹ்மானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

13 Nov, 2025 | 12:38 PM
image

(செ.சுபதர்ஷனி)

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மானுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட குற்றப்பத்திரிகை புதன்கிழமை ( 12) பிரதிவாதியிடம் கையளிக்கப்பட்டது.

2024ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுவதற்கு யோசனை முன்வைத்தாக தம்புள்ள தன்டர்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான தமீம் ரஹ்மானுக்கு எதிராக சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் மேற்படி வழக்கு விசாரணை புதன்கிழமை (13) உயர் நீதிமன்ற நீதியரசர் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபரால் மன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள தம்புள்ள தன்டர்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான தமீம் ரஹ்மானிடம் கையளிக்கப்பட்டிருந்தது. 

இதன்போது பிரதிவாதி தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  தனது சேவை பெறுநர் ஏற்கனவே கைதாகி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் தனது சேவை பெறுநர் பிரித்தானிய குடியுரிமை பெற்ற பங்களாதேஷ் பிரஜை ஆவார்.

இந்த வழக்கு காரணமாக பிரதிவாதி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தங்கியிருப்பதாகவும், இதன் காரணமாக அவரது தனிப்பட்ட மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்திருந்தார். 

அத்தோடு நீதிமன்றத்தின் முன்னால் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள அவர், வழக்கு விசாரணையை  விரைவில் முடிக்கத் தயாராக உள்ளார், மேலும் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் வாய் மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றார்.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த அரச தரப்பு சட்டத்தரணி  பிரதிவாதியால் முன்வைக்கப்பட்ட உண்மைகள் குறித்து சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த தினமொன்றை ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்சியங்களையும் கருத்திற் கொண்ட நீதியரசர் சந்தேகநபருக்கு 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் விதித்து பிணையில் செல்ல அனுமதியளித்திருந்தார்.  மேலும் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;...

2026-04-12 08:45:28
news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19