இன்றைய நவ நாகரிகமான காலகட்டத்தில் இளம் பெண்களும் திருமணமான இளம் பெண்மணிகளும் சுப வைபவங்களில் பங்கு பற்றுவதற்காக தங்க நகையை அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். இதற்காக அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து புதிய டிசைன்களில் வெளியாகி இருக்கும் தங்க நகையை.. நகை விற்பனை செய்யும் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, மனதிற்கு பிடித்த தையும் புதிய பெசன் நகையையும் தெரிவு செய்து , அங்கேயே அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்வையிடுகிறார்கள்.
அவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இருந்தால் மட்டுமே அதனை வாங்கவும் செய்கிறார்கள். இந்நிலையில் தங்க நகையை வாங்கியவுடன் அணியலாமா? என அவர்கள் அவர்களுடைய குடும்பத்தின் மூத்த பெண் உறுப்பினர்கள் கேட்கும் போது, இளம் தலைமுறை பெண்கள் இதிலென்ன தவறு? என்று எளிதாக எதிர் வினாவை தொடுக்கிறார்கள். ஆனால் இது தொடர்பாக சோதிட நிபுணர்களும் , ஆன்மீக முன்னோர்களும் கூறிய விடயங்களை பின்வருமாறு பார்வையிடலாம்.
தங்க நகை கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் அனைத்தும் தோஷம் கொண்டவை தான். ஏனெனில் அதன் உருவாக்கமும், அதனுடைய ரிஷி மூலமும் வாங்கி அணிபவர்களுக்கு தெரிவதில்லை. பெரும்பாலான நகைகள் அதாவது 95% நகைகள் தோஷம் கொண்டவையே.
இதனால் நல்ல நாளை- திதியை- ஓரையை- நட்சத்திரத்தை- தெரிவு செய்து தங்க நகையை வாங்கினாலும் அதனை வாங்கியவுடன் அணியக்கூடாது. வாங்கி வந்த தங்க நகையை 50 கிராம் அளவிற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கஸ்தூரி மஞ்சள் எனும் மஞ்சளை வாங்கி வந்து அதனை பொடியாக்கி அதில் சிறிதளவு பன்னீரை சேர்த்து அதில் நீங்கள் வாங்கிய தங்க நகையை இரண்டு மணி தியாலம் வரை ஊற வைத்து விட வேண்டும். அதன் பிறகு அந்த நகையை பன்னீரில் கழுவி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பின்னர் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து அல்லது இறைவனின் கழுத்தில் அணிவித்து, அதன் பிறகு அங்கு தொண்டு செய்யும் இறை ஊழியரிடமிருந்துஅந்த நகையை மீண்டும் பெற்று, அதற்குப் பிறகுதான் அதனை அணிய வேண்டும். இப்படி முறைப்படி தங்கத்தை தோஷம் நீக்கி அணியும் போது.. அந்த நகை எக்காரணத்தை முன்னிட்டும் உங்களை விட்டும் உங்களுடைய தலைமுறையை விட்டும் வெளியேறாது. உங்களுடைய பரம்பரையின் கௌரவத்தை பேசும் அடையாளமாக அது மாற்றம் பெறும்.
இன்றும் எம்முடைய மண்ணில் வெகு சில குடும்பங்களில் மாங்கல்யத்திற்காக தங்க நகையை வாங்கி பொற்கொல்லரிடம் கொடுத்து 'பொன் உருக்கு நாள் 'என்று ஒரு நாளை தெரிவு செய்து, அந்த நாளில் நகையை நெருப்பில் உருக்கி , அதன் பிறகு மாங்கல்யமாக வடிவமைப்பார்கள். அந்த மாங்கல்யம் - தோஷம் நீங்கப் பெற்று, தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அந்தப் பெண்மணிக்கு வழங்கும் என்பது ஐதீகம்.
தொகுப்பு: சுபயோக தாசன்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM