பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபா கொடுப்பனவு சட்டபூர்வமானது ; ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் - அமைச்சர் சமந்த வித்யாரத்ன

12 Nov, 2025 | 04:07 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள 200 ரூபா கொடுப்பனவு  சட்டவிரோது என்று குறிப்பிட்டு இந்த கொடுப்பனவை  வழங்கலை தடுக்க எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.தோட்டத் தொழிலாளர்கள் குழப்பமடையத் தேவையில்லை. ஜனவரி மாதத்தில் இருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை  (12) நடைபெற்ற  2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான   நான்காம்  நாள் விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.இருப்பினும்   இன்னும் அவர்களுக்கு  முழுமையான அடிப்படை உரிமைகள் கிடைக்கவில்லை. அவர்கள் இன்னும் கம்பனிகளுக்கு உரிமையுள்ள லயன் அறைகளிலேயே வசிக்கின்றனர்.

அவர்களுக்கு வீட்டு உரிமை,காணி உரிமை கிடையாது. போதுமான மலசலகூட வசதிகள்  இல்மை. குடிநீர் வசதிகளும் கிடையாது. இந்நிலையில் அவர்கள் வீதிகளுக்கு இறங்குவதற்கு இடமளிக்காது தேவையானதை வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம். முன்னர் வீதிகளுக்கு இறங்கி போராட்டம் நடத்தியே சம்பள அதிகரிப்புகள் இடம்பெற்றன.

ஆனால் இப்போது இவ்வாறு சம்பள அதிகரிப்பு ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். நாங்கள் இம்முறை சம்பளத்தை 400 ரூபாவினால் அதிகரித்து 1750 ரூபா சம்பளத்தை வழங்குகின்றோம். 25 நாட்கள் வேலை செய்தால் மேலதிகமாக மாதத்திற்கு 10,000 ரூபா கிடைக்கும்.

இப்போது இதற்கு எதிர்க்கட்சியில் சிலர் எதிர்ப்புகளை வெளியிட்டு சமூகத்தில் தவறான கருத்துக்களை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அரச நிதியை எவ்வாறு கம்பனிகளுக்கு வழங்க முடியும். இவ்வாறு வழங்க முடியாது. இது சட்டவிரோதமானது என்ற கருத்துக்களை பரப்ப முயற்சிக்கின்றனர். இதன்மூலம் நீதிமன்றதிற்கு செல்லவும் முயற்சிக்கப்படுகின்றது. அப்பாவி தொழிலாளர்களுக்கு இவ்வாறு சம்பள அதிகரிப்பை வழங்கும் நடவடிக்கையை காலால் பிடித்து இழுப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  நேற்று செவ்வாய்க்கிழமை (11)   சபையில் உரையாற்றுகையில் இந்த தொகையை தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் கம்பனிகளுக்கு வழங்கலாம் என்று கூறியிருந்தார்.

இவர்கள் கம்பனிகளுக்கு வழங்கியதை போன்று எங்களுக்கும் யோசனைகளை கூறுகின்றனர். இதில் சூழ்ச்சியொன்று உள்ளது. அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து அதனை நிறைவேற்றுவதன் ஊடாக அதுவே சட்டமாகிவிடும். இதனால் சட்டப்படி இதில் பிரச்சினை இருக்காது.

எங்களுக்கு இதனை வழங்க முடியாது என்று இவர்கள் கூறுவார்களாக இருந்தால் உர மானியங்கள் வழங்குகின்றோம். கம்பனிகளுக்கு நிவாரணங்களை வழங்குகின்றோம். அதேபோன்று இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அங்கவீனர்களுக்கு தனியார் துறையில் தொழில் வழங்கினால் அரசாங்கம் மாதாந்தம் 15ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 எதிர்தரப்பினர்  சம்பள அதிகரிப்பு குறித்து மாறுப்பட்ட கருத்துக்களை  குறிப்பிடுகிறார்கள். இதனை வழங்காமல் இருக்கவே இந்த தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றனர். எவ்வாறாயினும் தோட்டத் தொழிலாளர்கள் குழப்பமடையத் தேவையில்லை. கூறியவாறு நாங்கள் ஜனவரி மாதத்தில் இருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06