(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாசார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நிலையியற் கட்டளை 27/ 2 இல் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசியலமைப்பின் 2 ஆம் அத்தியாயம், இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானத்தை வழங்குவதோடு, ஏனைய சகல மதங்களுக்கும் அதற்குரிய உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், பௌத்தத்தைப் பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.
புத்த சாசனத்தையும் அதனது நிலைத்தன்மைக்காகச் செயற்படும் மகா சங்கத்தினரைப் பாதுகாப்பதும், அதன் நீண்ட கால இருப்பும், சங்க மரபின் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தலும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக அமைந்து காணப்பட வேண்டும். என்றாலும், தற்போதைய அரசாங்கம் அந்த கலாசார பாரம்பரியத்தை புறக்கணிப்பதாகத் தெரிகிறது.
1979 ஆம் ஆண்டின் 64 ஆம் இலக்க பிரிவேனா கல்விச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதும், இதன் மூலம், பாரம்பரிய பிரிவேனா கல்விக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பதன் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளன
2025 ஆம் ஆண்டில் புத்தசாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் அதன் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம், 2026 ஆம் ஆண்டில் இந்த அமைச்சின் கீழ் பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் போலவே அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை என்பவற்றை முன்வைக்க வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM