இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர், வெள்ளை மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) பதவியேற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. எனினும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா பெருமளவில் குறைத்துள்ளது. ஏதாவது ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும். இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று ட்ரம்ப் இதன்போது மேலும் கூறினார்.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கடுமையாக வரி விதித்திருந்தது. குறிப்பாக, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் 50 வீத வரி விதித்தார்.
அதனையடுத்து, இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை வெகுவாக குறைத்துக்கொண்டது.
இதனையடுத்து, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஐந்து சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதற்கிடையே நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் ட்ரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருக்கிறார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM