எகிப்தில் கெய்ரோவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த பஸ் ஒன்று லொறியில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததோடு, 39 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை (11) விபத்துக்குள்ளான பஸ்ஸில் 27 ரஷ்யர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெய்ரோவில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்த பஸ்ஸில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், ஹர்ஹடா - கெய்ரோ தேசிய நெடுஞ்சாலையில் ரஸ் ஹரிப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சுற்றுலா பஸ் மீது எதிரே வந்த லொறி மோதியுள்ளது.
இந்த விபத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்த பஸ் சாரதியும் ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பணி ஒருவரும் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM