தமிழ் திரையுலகில் திறமை வாய்ந்த நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் திரு வீர் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சி. ஹெச். குசேந்தர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பரத் மஞ்சு ராஜு இசையமைக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை கங்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வர் ரெட்டி மூலி தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 19 ஆம் திகதியன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது என்றும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு முதன்மையான தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'தீயவர் குலை நடுங்க' எனும் திரைப்படம் விரைவில் வெளியாகிறது என்பதும் இந்த ஆண்டில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் முதல் தமிழ் - தெலுங்கு திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM