தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'சிக்மா' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் மகனும், அறிமுக இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வரும் 'சிக்மா' எனும் திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜிபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ் .தமன் இசையமைத்திருக்கிறார். சாகசத்துடன் கூடிய எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' அச்சமற்ற - சுதந்திரமான இளைஞன் - இந்த சமூகத்தால் புரிந்து கொள்ளப்படாத இளைஞன்- தன் இலக்குகளை நோக்கி எப்படி நகர்கிறார்? என்பதையும், அவர் எம்மா மாதிரியான சவால்களை மேற்கொள்கிறார் என்பதையும் இப்படம் பேசுகிறது. வேட்டை- கொள்ளை- நகைச்சுவை -என வித்தியாசமான அனுபவங்களை வழங்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது என்றும் , அதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும், இது தொடர்பான புதிய தகவல்கள் தொடர்ச்சியாக விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'வேட்டைக்காரன்' என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி நடிகராக அறிமுகமான விஜயின் வாரிசான ஜேசன் சஞ்சய் -கதையின் நாயகனாக அறிமுகமாவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில்.. அவர் 'சிக்மா' படத்தின் மூலமாக இயக்குநராக கலைப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவருடைய எண்ணத்தில் உருவான 'சிக்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - நட்சத்திர இயக்குநராக மிளிர்வார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM