இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்' நிகழ்வு கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்' நிகழ்வு ஒரு வாரம் நடைபெறும்.
சமஸ்கிருதத்தின் பாரம்பரியமாகவும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பகிரப்பட்ட நாகரிக மரபாகவும் இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்நிகழ்வின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கு சமஸ்கிருத மஹோத்ஸவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு இலங்கையின் கல்வி அமைச்சுக்கு தனது பாராட்டை தெரிவித்தார்.
அத்துடன், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசாரப் பாலமாக சமஸ்கிருத மஹோத்ஸவத்தின் முக்கிய பங்கை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா எடுத்துரைத்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அறிஞர்கள், மதகுருமார், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM