பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் உறுதியாக அமுல்படுத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருண

10 Nov, 2025 | 04:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பு  குறித்து  வழங்கிய வாக்குறுதிகள் வெறும் வரவு - செலவுத் திட்ட  உரையாகவே காணப்பட்டது. பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் உறுதியாக அமுல்படுத்த வேண்டும் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (10) நடைபெற்ற  2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் நாட்டை  பொறுப்பேற்றோம் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.  

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித்  தேர்தல் நடைபெறும்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டிருந்தது. 

அதனால் தான் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற்றது ஆகவே பொருளாதார நெருக்கடியுடன்  நாட்டைப் பொறுப்பேற்றோம் என்று இனியும் குறிப்பிடாதீர்கள்.

2025ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 20  சதவீதமானவை மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளன.மிகுதி 80 சதவீதமானவை காணாமலாக்கப்பட்டுள்ளன.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும்  பல விடயங்கள்  குறிப்பிடப்பட்டுள்ளன. வரவு -செலவுத் திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை.

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு பற்றி வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும்   வரவு- செலவுத்  திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு பற்றி  குறிப்பிடப்பட்டன.

இருப்பினும் ஏதும் செயற்படுத்தப்படவில்லை. ஆகவே இம்முறை வழங்கியுள்ள வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

மாகாணசபைத் தேர்தல் பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்புக் கோர வேண்டிய அவசியம் கிடையாது. 

அரசாங்கத்திடம் பெரும்பான்மை உள்ளது. சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்து மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்.இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என்பதை உறுதியாக குறிப்பிடலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24
news-image

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை...

2025-12-06 20:15:08
news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11
news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09