அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (10) பிற்பகல் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
17 வயதுடைய உயர்தர மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பகல் 12.30 மணியளவில் தலாவ பகுதியில் இருந்து ஜயகங்கை ஊடாக நொச்சியாகம நவஹங்குரன்கெத்த கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த பஸ், பின்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு முந்திச் செல்வதற்காக இடம் கொடுப்பதற்கு முயற்சித்தபோது கால்வாயிலில் விழுந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்பது மேலும் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களில் 16 ஆண்களும் 31 பெண்களும் உள்ளடங்குவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் திலகரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த விபத்து தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM