சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள், களிம்புகளுடன் நால்வர் கைது!

10 Nov, 2025 | 01:26 PM
image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் கற்பிட்டியில் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கடந்த 06 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கற்பிட்டி இப்பந்தீவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் நான்கு ) சந்தேக நபர்கள் ஒரு டிங்கி படகுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கடல் வழியே கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் உச்சிமுனை கடற்படை பிரிவினால் இப்பந்திவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கருவலக்குடா கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகொன்று சோதனை செய்யப்பட்டது. இதன் போது, அந்த டிங்கி படகால் எடுத்துச் செல்லப்பட்டு கருவலக்குடா கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினேழு (17) பைகளில் பொதிசெய்யப்பட்டிருந்த நான்காயிரத்து அறுநூற்று ஐந்து (4605) மருந்து மாத்திரைகள், பதினைந்தாயிரத்து அறுநூற்று இருபத்தேழு (15,627) மருத்துவ களிம்புகள், நானூற்று தொண்ணூற்று நான்கு (494) திரவ மருந்து பாட்டில்கள் மற்றும் நான்காயிரத்து இருபது (4020) மருந்து பாக்கெட்டுகளுடன் நான்கு (04) சந்தேக நபர்களையும் ஒரு (01) டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 32 வயதுக்குட்பட்ட கல்பிட்டி, தோராயடி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள், மருந்து மாத்திரைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2025-12-15 10:42:22
news-image

மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி - கண்டி...

2025-12-15 10:30:40
news-image

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள கற்களை...

2025-12-15 10:23:59
news-image

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்...

2025-12-15 09:57:31
news-image

21 கிலோ 'குஷ்' கஞ்சாவுடன் போதைப்பொருள்...

2025-12-15 11:10:51
news-image

கொழும்பு துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு...

2025-12-15 09:51:43
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

2025-12-15 08:59:20
news-image

புதையல் தோண்டிய 06 பேர் கைது!

2025-12-15 09:19:43
news-image

அம்பலாங்கொடை முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர்...

2025-12-15 09:14:07
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2025-12-15 09:19:00
news-image

நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான...

2025-12-15 06:09:10
news-image

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில்...

2025-12-15 03:54:13