கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு வாகன விபத்துக்களில் எட்டு வயது சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவங்கள் மாத்தளை, தனமல்வில, வெலிகந்த மற்றும் கொட்டவில ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளன.
வெலிகந்த அசேலபுர பகுதியில் அசேலபுர குருலுபெத்த வீதியில் உழவு இயந்திரம் எட்டு வயது சிறுவன் மீது மோதியது. இதன்போது, அசேலபுரத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் பலத்த காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, கண்டி-யாழ்ப்பாணம் அதிவேக நெடுஞ்சாலையில் தியாபுபுல பாலத்திற்கு அருகில், மாத்தளையிலிருந்து எல்வெல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி பாதசாரி ஒருவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த 70 வயதுடைய முதியவர் மாத்தளை வைத்டதியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தனமல்வில-வெல்லவாய வீதியில் பலஹருவ பகுதியில் எதிர் திசையில் பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, பலத்த காயமடைந்து சிகிச்சை 45 வயதான வேன் சாரதி உயிரிழந்துள்ளார்.
கொட்டவிலவில் கம்புருகமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று உழவு இயந்திரத்துடன் நேரு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கம்புருகமுவவைச் சேர்ந்த 82 வயதான சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM