இன்றைய திகதியில் எம்மில் பலரும் நாளாந்தம் எதிர்பாராத வகையிலான சிறிய விபத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக மாடி படியிலிருந்து இறங்கி வரும் போதோ அல்லது ஏறும்போதோ கால் இடறி விழுந்து விடுவார்கள். இத்தகைய தருணங்களில் பாதிப்பிற்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையும் , வைத்திய சிகிச்சையும் பெற்றுக் கொள்கிறார்கள். அதே தருணத்தில் வாகனத்தில் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால்.. உடலில் பல இடங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய நிலையை மருத்துவ மொழியில் பாலிட்ராமா எனக் குறிப்பிட்டு, நோயாளியை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து ஒருங்கிணைந்த நிவாரண சிகிச்சையை வழங்குகிறார்கள்.
இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியின் உடலில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை முதலில் பரிசோதனைகள் மூலம் துல்லியமாக அவதானிப்பார்கள். அதனைத் தொடர்ந்து முதலுதவி மற்றும் உயிர் காக்கும் சிகிச்சையை முதன்மையான நிவாரண சிகிச்சையாக மேற்கொள்வார்கள். பின்னர் உடலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்கள்- எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் - நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள்- சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் - உளவியல் சிகிச்சை நிபுணர்கள் - இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் - ஆகியோர் ஒருங்கிணைந்து நோயாளிகளுக்கு நிவாரண சிகிச்சையை வழங்குவார்கள்.
அதன் பிறகு நோயாளியை மெல்ல மெல்ல விபத்தின் காரணமாக ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியில் இருந்து மீட்டு, அவர்களை சிகிச்சைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் ஆலோசனைகளை வழங்குவார்கள். அதனைத் தொடர்ந்து பக்க விளைவுகள் குறித்தான ஆலோசனைகளையும் வழங்கி நிவாரண சிகிச்சையை மேற்கொள்ள தொடங்குவார்கள். இதன் போது பலருக்கும் குறைந்தபட்சம் மூன்று மாத காலம் ஒருங்கிணைந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
வைத்தியர் முத்தையன் தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM