போதைப்பொருள் கடத்தல்காரரான “மஹரகம அக்கா” என்று அழைக்கப்படும் பெண் ஒருவர் நுவரெலியா பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் 50 வயதுடைய பெண் ஆவார்.
இவர் நுவரெலியா , வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பெத்திபொல ஆகிய பிரதேசங்களில் நீண்ட நாட்களாக போதைப்பொருளை கடத்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
சந்தேக நபரின் வீட்டிலிருந்து 32 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த 141,000 ரூபாய் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நுவரெலியா பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM