இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

Published By: Digital Desk 1

08 Nov, 2025 | 09:37 AM
image

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, திருகோணமலை - பட்டிகலுவ வீதியில் உள்ள பஞ்சங்கேணி பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநரும் பின்னால் இருந்த பயணி ஒருவரும் பலத்த காயமடைந்து வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள்  ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிகம சந்தியில், அம்பாந்தோட்டையிலிருந்து கொன்னொருவ நோக்கிப் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் அம்பாந்தோட்டையை சேர்ந்த 79 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய உழவு இயர்நிதரத்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24
news-image

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை...

2025-12-06 20:15:08
news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11
news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09