2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த வரவு–செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வின் இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனவும், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1,750 ஆக உயர்த்தப்படும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், சுங்க வரிக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.
அவர் உரையில், நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டின் நிலையை இவ்வாண்டின் இறுதிக்குள் மீண்டும் அடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ. 5,300 பில்லியனாகவும், மொத்தச் செலவு ரூ. 7,057 பில்லியனாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரவு–செலவுத் திட்டப் பற்றாக்குறை ரூ. 1,757 பில்லியனாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் வரவு–செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரும் பங்கேற்ற வழக்கமான தேநீர் விருந்துபசாரம் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இதனிடையே, இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை (08) தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறும் எனவும், வாக்கெடுப்பு நவம்பர் 14 மாலை 6.00 மணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் வாசிப்பு (குழுநிலை விவாதம்) நவம்பர் 15 முதல் டிசம்பர் 05 வரை நடைபெறவுள்ளதுடன், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 05 மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM