தங்களுடைய பிள்ளைகளை தனியார் பாடசாலையில் கல்வி கற்பதற்காக அனுமதித்திருக்கும் பெற்றோர்களுக்கு திடீர் திடீரென்று பாட சாலையில் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்துவார்கள்.
இது எம்முடைய மாதாந்திர வரவு - செலவு திட்டத்தில் இடம்பெறாமல் இருந்தாலும்.. கல்வி தொடர்பான செலவு என்பதால், அதனை முதலீடாக கருதி உடனடியாகவும் விரைவாகவும் செய்திட வேண்டிய சூழல் உண்டாகும்.
இதுபோன்ற தருணங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் குறுகிய கால கடனை வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் இது போன்ற சூழலில் நீங்கள் தன வரவை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சம வழிபாட்டை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களுடைய பூஜை அறையில் புதன் பகவானை மனதில் தியானித்து புதன்கிழமையன்று ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்தத் தருணத்தில்
'ஓம் கஜத்துவ ஜாய வித் மஹே!
சுக ஹஸ்தாய தீமஹி!
தன்னோ புத ப்ரசோதயாத்!' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
புதன் பகவான், கல்வி- ஞானம்- தனம்- ஆகியவற்றிற்கு அதிபதியாக இருப்பதால்.. உங்களுடைய புதன் பகவான் தொடர்பான பிரார்த்தனை உடனடியாக பலிக்கும். இந்தப் பிரார்த்தனையை தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளில் தொடர்ந்தால்... அறிமுகமான மற்றும் அறிமுகமற்றவர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM