மலையாள நடிகரும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான துல்கர் சல்மான் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'காந்தா' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காந்தா' எனும் திரைப்படத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்ய ஸ்ரீ போர்சே, ராணா ரகுபதி உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
டானி சாஞ்செஸ் லோபஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜானு சந்தர் இசையமைத்திருக்கிறார். ஒரு திரை நட்சத்திரத்தின் வாழ்வியலை பேசும் இந்த திரைப்படத்தை ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' எந்த தனி மனிதனும், ஒரு புத்தகமும் சொல்லித் தராத பல விடயங்களை சினிமா எமக்கு சொல்லிக் கொடுத்தது. நேற்றைய விட இன்று இன்னும் நல்லவனாக இருக்க வேண்டும் என்றும் சினிமா தான் சொல்லிக் கொடுத்தது. இதனால் நான் சினிமாவை இறுக பற்றி கொண்டேன்.
1950களில் தமிழ் திரையுலகில் ஆளுமைகளாக உச்சத்தில் இருந்த நட்சத்திரங்களின் வாழ்வியலும் , அவர்கள் எதிர் கொண்ட மனப் போராட்டத்தையும் மையப்படுத்தி தான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன் '' என்றார்.
முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் - காலகட்டத்தை நேர்த்தியாக பிரதிபலிப்பதாலும் , அக்காலகட்ட சினிமாவை நுட்பமாக விவரித்து இருப்பதாலும், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM