எங்களின் ஐந்தாண்டு கால உழைப்பில் வெளியான 'ஆரியன்' திரைப்படத்திற்கு பட மாளிகையில் ரசிகர்களும், ஊடகத்தினரும் அளித்த வரவேற்பை போல்.. இந்த படம் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெறும்'' என ஆரியன் படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் பிரவீண். கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் -செல்வ ராகவன்- ஷ்ரத்தா ஸ்ரீநாத் - மானசா சவுத்ரி - உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'ஆரியன்' எனும் திரைப்படம் படமாளிகையில் வெளியாகி ரசிகர்களிடம் பாரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து படத்தினை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வினை படக்குழுவினர் ஒருங்கிணைத்தனர் . சென்னையில் பிரத்யேகமாக நடைபெற்ற இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்குபற்றினர்.
இதில் படத்தின் நாயகனும் , தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் பேசுகையில், '' ஆரியன் எமக்கு மிகவும் ஸ்பெஷலான படம். எனது நிறுவனத்தில் இருந்து தயாரித்து வெளியான மூன்றாவது வெற்றி படம். சில காரணங்களால் இப்படம் திட்டமிட்ட திகதியில் வெளியிடாமல் தள்ளிப் போனது. ஆனால் இந்த இடைவெளியில் இயக்குநர் பிரவீண் நன்றாக உழைத்து புதிய கோணத்தில் இந்த படைப்பை வழங்கியுள்ளார்.
படம் வெளியான பிறகு உச்சகட்ட காட்சியின் நீளம் குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். இதற்கு மதிப்பளித்து படத்தின் நீளத்தை குறைத்தோம். தற்போது படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படமாளிகையில் இப்படத்திற்கு கிடைத்து வரும் ஆதரவை விட டிஜிட்டல் தளங்களில் இப்படம் வெளியாகும் போது சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.
இதனிடையே 'ராட்சசன்' படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் காவல்துறை உயர் அதிகாரியாக தோன்றி நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது என்பதும் அதற்கு மேல் படம் இன்வெஸ்டிகேட் கிரைம் திரில்லர் ஜேனரில் எளிதில் யூகிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்கள் இருந்ததால்.. ரசிகர்களிடம் தொடர்ந்து இப்படத்திற்கு ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM