(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய கரபந்தாட்ட சங்க (Central Asia Volleyball Association - CAVA) 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பயின்ஷிப்பின் மூன்றாம் நாளான இன்று கிர்கிஸ்தானை அதிரவைத்து 3 நேர் செட்களில் இலங்கை அபார வெற்றியீட்டியது.


முழுப் போட்டியிலும் மிகத் திறமையான வியூகங்களுடன் விளையாடிய இலங்கை வீராங்கனைகள் முதல் தடவையாக இந்த சுற்றுப் போட்டியில் ஆக்ரோஷத்துடனும் வெற்றிபெற வேண்டும் என்ற வைராக்கியத்துடனும் விளையாடினர்.
முதலாவது செட்டில் 25 - 19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதும் இலங்கை வீராங்கனைகளின் முகங்களில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் காண முடிந்தது.

இரண்டாவது செட்டில் இரண்டு அணிகளும் சரி சமமாக மோதிக்ககொண்டவண்ணம் இருந்தன. இறுதியில் சமநிலை முறிப்பு முறையில் 27 - 25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.
மூன்றாவது செட்டின் கடைசிக் கட்டத்தில் புத்திசாதுரியத்துடன் விளையாடி இலங்கை 25 - 22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று போட்டியை 3 - 0 என்ற நேர் செட்களில் கைப்பற்றியது.
இதேவேளை, மாலைதீவுக்கு எதிரான போட்டியில் 25 - 7, 25 - 10, 25 - 11 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் நேபாளம் வெற்றிபெற்றது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM