2035க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Published By: Vishnu

06 Nov, 2025 | 09:16 PM
image

2035 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் பதிவாகும் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாகக் குறைக்க தற்போதைய அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஊடகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு தேசிய தொழுநோய் மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில் அமைச்சர் இதை வலியுறுத்தினார். 

இலங்கை 1996 ஆம் ஆண்டு தொழுநோயை ஒழித்தது, ஆனால் இந்த பயணம் இன்னும் முடிவடையவில்லை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார், நோயாளர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் கூறினார். ஆண்டுதோறும் சுமார் 1500-2000 புதிய தொழுநோய் நோயாளிகள் கண்டறியப்படுவதாகவும், அதில் சுமார் 10% பேர் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் அமைச்சர் கூறினார். 

நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருவதை வலியுறுத்திய அமைச்சர், நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் இந்த மாநாடு ஒரு முக்கியமான  நிகழ்வாக அமையும் எனவும் தொழுநோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை இது மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறினார். 

சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் இங்கு கூறினார்.

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்க உலக சுகாதார அமைப்பு மற்றும் சசகாவா அறக்கட்டளை பல ஆண்டுகளாக சுகாதார அமைச்சகத்திற்கு அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். 

2025 தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி ஆகியோரின் பங்கேற்புடன் ஆரம்ப மாகியது.

“தொழுநோயை ஒழிக்க கைகோர்ப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாடு இன்றும் நாளையும் (07) நடைபெறும். இரண்டு நாள் நிகழ்வை சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தலைமையில் உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான  அலுவலகம் அத்துடன் சசகாவா தொழுநோய் ஒழிப்பு அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த இரண்டு நாள் மாநாட்டில், சர்வதேச அறிவைப் பகிர்ந்து கொள்வது, யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறும்.

இந்த மாநாட்டின் தொடக்கத்தில், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்க தயாரிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இந்த மாநாட்டில் தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சருமான டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, ஜப்பானுக்கான இலங்கைத் தூதர் அகியோ இசோமாட்டா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்கே, நிப்பான் அறக்கட்டளையின் தலைவர் யோஹெய் சசகாவா, உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான அலுவலகத்தின் பொறுப்பாளர் டாக்டர் மோமோ தகாயுச்சி, உலகளாவிய தொழுநோய் திட்டத்தின் தலைவர் டாக்டர் விவேக் லால், தொழுநோய் ஒழிப்பு பிரச்சாரத்தின் இயக்குநர் டாக்டர் யசோமா வீரசேகர, நிபுணர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாகாண சுகாதார சேவை இயக்குநர்கள், பிராந்திய சுகாதார சேவை இயக்குநர்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், முப்படைகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

2025-12-15 08:59:20
news-image

புதையல் தோண்டிய 06 பேர் கைது!

2025-12-15 09:19:43
news-image

அம்பலாங்கொடை முகத்துவார தேவாலயக் குழுத் தலைவர்...

2025-12-15 09:14:07
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2025-12-15 09:19:00
news-image

நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான...

2025-12-15 06:09:10
news-image

அனர்த்த நிவாரண விடயங்களில் ஜனாதிபதியின் கருத்துகளில்...

2025-12-15 03:54:13
news-image

கிழக்கு அலை வடிவ காற்றழுத்த தாக்கம்...

2025-12-15 03:51:43
news-image

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும்...

2025-12-15 02:57:37
news-image

டிக்டொக் தொடர்பு முடிவில் 24 வயது...

2025-12-15 02:50:37
news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07
news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10