(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க (CAVA) 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நேபாளத்திடம் இலங்கை தோல்வி அடைந்தது.
புதன்கிழமை மாலை நடைபெற்ற போட்டியில் 1 - 3 என்ற செட்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியைத் தழுவியது.
முதல் இரண்டு செட்களில் 18 - 25, 24 - 26 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்திடம் தோல்வி அடைந்த இலங்கை, 3ஆவது செட்டில் திறமையாக விளையாடி 25 - 19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆனால், 4ஆவது செட்டில் அநாவசியமாக தவறுகளை இழைத்ததால் இலங்கை 20 - 25 என தோல்வி அடைந்தது.
இப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற கிர்கிஸ்தானுக்கும் மாலைதீவுகளுக்கும் இடையிலான போட்டியில் கிர்கிஸ்தான் மிக இலகுவாக 3 நேர் செட்களில் (25 - 21, 25 - 9, 25 - 21) வெற்றிபெற்றது.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று கிர்கிஸ்தானை இலங்கை எதிர்த்தாடவுள்ளது. மற்றைய போட்டியில் நெபாளமும் மாலைதீவுகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM