மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளை தாக்கிய கல்மேகி சூறாவளியில் சிக்கி 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய பிலிப்பைன்ஸை நேற்று புதன்கிழமை (05) தாக்கிய சூறாவளி, இந்த ஆண்டு இப்பகுதியில் தாக்கிய மிக வலிமையான சூறாவளி என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கல்மேகி சூறாவளியால், பிராந்தியத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான செபு நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளதோடு, 127 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 82 பேர் காயமடைந்துள்ளனர்.
நீரில் மூழ்கியதால் பெரும்பாலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கல்மேகி சூறாவளி இன்று வியாழக்கிழமை (06) காலை பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறி மத்திய வியட்நாமை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM