நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அநுராதபுரம் - பாதேனிய வீதியில் கும்புக்கஹமுல சந்திக்கு அருகில், நேற்று (05) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியில் வலதுபுறம் திரும்பும்போது பின்னால் வந்த பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் இருந்த ஒருவர், வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநெரம், பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி - பியகம வீதியில் ரக்கஹவத்த பகுதியில் பியகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள சமிக்ஞை தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மல்வானை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனைகளுக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதவாச்சி - ஹொரவபொத்தான வீதியில் வேன் ஒன்று, வீதியோரத்தில் நின்றிருந்த பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உல்பத்கம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், ஹோமாகம - வலவ்வ சந்தி - உனபந்துர சந்தி வீதியில் நகரசீமா மாவத்தை அருகே உனபந்துர சந்தி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணியொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM