களனி பல்கலைக்கழக மாணவர்களின் நிர்மாணிப்பில் போத்தல் மூடிகளால் வடிவமைக்கப்பட்ட பயணிகள் இருக்கை

05 Nov, 2025 | 04:57 PM
image

(நமது நிருபர்)

ஒழுங்கற்ற முறையில் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களின் மூடிகளை திறம்பட பயன்படுத்தி  களனி பல்கலைக்கழக மாணவர்கள்,பயணிகள் ஆசனம் ஒன்றை மருதானை புகையிரத நிலையத்தில்  உருவாக்கியுள்ளனர்.

இலங்கையில் பொது போக்குவரத்து துறையில் பெரும்பாலான  பயணிகள் தினமும் புகையிரதங்களைப்  பயன்படுத்துகின்றனர்.  பெரும்பாலான பயணிகள்  பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்களை புகையிரத  பாதைகளிலும் புகையிரத நிலையங்களிலும் ஒழுங்கற்ற முறையில் வீசுகின்றனர்.

ஒழுங்கற்ற முறையில் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களின் மூடிகளை திறம்பட பயன்படுத்தி  களனி பல்கலைக்கழக மாணவர்கள்   சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் கழிவுகள் பிளாஸ்டிக் போத்தல்கள்  முறையற்ற வகையில் சூழலுக்கு விடப்படுவதால் புகையிரத பாதைகள் மற்றும் அழகான மலையக புகையிரத பாதை போன்ற அழகான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு குறிப்பாக சேதம் விளைவிக்கும் ஒரு சம்பவமாக மாறியுள்ளது.

ஒழுங்கற்ற முறையில் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களின் மூடிகளை திறம்பட பயன்படுத்தி  களனி பல்கலைக்கழக மாணவர்கள், சீரோ பிளாஸ்டின் சமூகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்  ஏற்பாடு செய்த ப்லூம் மோர்பிச் செயற்திட்டம் ஊடாக கடான அப்சைக்கிள் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மருதானை புகையிரத நிலைய நிர்வாகத்தின் முழுமையான கண்காணிப்பில் மருதானை புகையிரத நிலையம் மற்றும் புகையிரத பாதையில் முறையற்ற வகையில் வீசப்பட்ட போத்தல் மூடிகளை பயன்படுத்தி பயணிகள் ஆசனம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த பயணிகள் இருக்கை   நேற்று  மருதானை புகையிரத  நிலையத்திற்கு வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பயன்படுத்துவதும், உற்பத்தி மிக்க புதுமைகளை உருவாக்குவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பயணிகளின் பயன்பாட்டிற்காக நடைமேடை  இருக்கையை மருதானை  புகையிரத   நிலைய பொறுப்பதிகாரி கபில புஷ்பகுமார திறந்து வைத்தார். புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர உட்பட களனி பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06