இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா துணைநிற்கும் நம்பகரமான பங்காளியாக இருக்கும் - உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

05 Nov, 2025 | 02:50 PM
image

ரொபட் அன்டனி 

இலங்கை அதன் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பயணத்தைத் தொடங்கியுள்ள  நிலையில், இந்தியா ஒரு நம்பகமான பங்காளியாக, நம்பிக்கைக்குரிய நண்பனாக மற்றும் மிக நெருங்கிய அண்டை நாடாக உறுதியாக நிற்கும் என்று  இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

பொது-தனியார் கூட்டாண்மை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (04) கொழும்பு ஐ.சி.டி. ரத்னாதீப ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்திய -இலங்கை வர்த்தக சபை ஆகியவை இணைந்து நேற்று இந்த கலந்துரையாடலைக் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தன.

அதில் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் உரையாற்றுகையில்,  

ஆழமான மற்றும் ஆற்றல்மிக்க பொருளாதார உறவு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவு புவியியல், வரலாறு மற்றும் கலாச்சாரம் மட்டுமல்லாமல், ஆழமான மற்றும் ஆற்றல்மிக்க பொருளாதார உறவையும் பகிர்ந்து கொள்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.

வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, எரிசக்தி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற பல துறைகளில் இரு நாடுகளுக்கும் வலுவான உறவுகள் உள்ளன.  நமது நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பாய்ச்சல்கள், நமது செழிப்பு ஒன்றோடொன்று இணைந்தவை  என்பதையும், நமது வளர்ச்சி பரஸ்பரமாக இருக்க வேண்டும் என்பதையும் காட்டுகின்றன," .

கடந்த  டிசம்பர் 2024இல் இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணம் மற்றும் இந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை  என்பனவற்றின்போது பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியில் இலங்கைக்குப் பங்காளியாக இருப்பதற்கான இந்தியாவின் ஆழமான மற்றும் நிலையான அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், கடன்-சார்ந்த  செயற்பாடுகளுக்கு   பதிலாக, வணிகம் சார்ந்த மற்றும் முதலீட்டை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு உத்தியைப் பின்பற்றவும் இரண்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பொது-தனியார் கூட்டாண்மை   ஒரு "திருப்புமுனையாக " இருந்துள்ளது.  இந்த அனுபவம் இலங்கைக்குப் பொருத்தமானது.

தேசிய நெடுஞ்சாலைகள், மெட்ரோ அமைப்புகள் முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வரை, பொது-தனியார் கூட்டாண்மை இந்தியாவின் பொது இலக்குகளை அடைய தனியார் துறையின் புதுமை, திறன் மற்றும் முதலீட்டைப் பயன்படுத்த உதவியுள்ளது.

நகராட்சி சேவைகள், கழிவு மேலாண்மை மற்றும் கிராமப்புற நீர் வழங்கல் போன்ற சிறிய அளவிலான பகுதிகளிலும் பொது-தனியார் கூட்டாண்மை கட்டமைப்பானது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொது-தனியார் கூட்டாண்மை இங்கு மாற்றத்தக்கப் பாத்திரத்தை வகிக்க முடியும் என்றும். நமது மக்கள் சேவைக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய தெற்குப் பகுதிக்கும் உத்வேகம் அளிக்கும் கூட்டாண்மை மாதிரிகளை நமது இரு நாடுகளும் இணைந்து உருவாக்க முடியும்.  அனைத்துத் துறைகளிலும் இலங்கைக்கு இந்தியா தனது வலுவான மற்றும் நிலையான உறுதிப்பாட்டை மீண்டும்  வலியுறுத்துகிறது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச சேவை சம்பள அமைப்பு கட்டமைப்பு...

2025-11-15 14:46:42
news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26