கடற்படைத் தளபதிக்கு பாப்பி மலர் அணிவித்த முன்னாள் படை வீரர் சங்கம்

05 Nov, 2025 | 12:51 PM
image

வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட பாப்பி மலர் நினைவேந்தலுடன் இணைந்து, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பாப்பி மலர் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே (ஓய்வு), செவ்வாய்க்கிழமை (04) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு பாப்பி மலரை அணிவித்தார். 

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது மற்றும் கடந்த முப்பது ஆண்டுகளாக தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்த பாப்பி மலர் நினைவு தினம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 

அதன்படி, போரின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து துணிச்சலான போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில், இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பாப்பி குழுவின் தலைவர் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதிக்கு பாப்பி மலரை அணிவித்தார்.

மேலும், இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 16:16:43
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-10 13:43:54
news-image

மன்னாரில் பீடி இலைகளுடன் மூவர் கைது!

2025-11-10 12:44:07