உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள். அந்த வகையில் ஒவ்வொரு 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். என சுகாதார கல்வி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெ.எம்.டபிள்யு. ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.இதனை முன்னிட்டு மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கில் சுகாதார கல்வி பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்கொலைக்கான காரணங்களின் பட்டியலின் அடிப்படையில் 90 சதவீதம் தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமாக அமைகின்றது. இது குறித்து மக்கள் மத்தியில் போதிய அறிவின்மையே காணப்படுகின்றது.
இலங்கையை பொறுத்தமட்டில் 1995 ஆம் ஆண்டே அதிகூடிய தற்கொலை பதிவாகியுள்ளது. தற்போதும் தற்கொலைகள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. குறிப்பாக முறையற்ற போதைப்பொருள் பாவனை, அதிகரித்த வேலைப்பளு, நெருங்கிய உறவுகளின் திடீர் பிரிவு அல்லது எதிர்பாராத மரணம், பரீட்சை மற்றும் கல்வி சுமை அதிகரித்தல், பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமை மற்றும் தவறான பாலியல் நடத்தைகள், தொடர்ச்சியான ஏமாற்றங்கள் போன்ற காரணிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறான மன அழுத்தம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது எதிர்காலம் பற்றிய அக்கறை இன்மை, தூக்கம் இன்மை, நண்பர்கள் மீதும் உறவுகள் மீதும் நம்பிக்கையற்றிருத்தல், தனிமையை நாடுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும் இதற்கு ஆரம்ப கட்டத்திலேயே முறையான சிகிச்சையளிக்காவிடின் இது தற்கொலை எண்ணங்களை தோற்றுவிக்கும்.
மேலும் தற்கொலையை தூண்டும் காரணிகளாக மருந்தகங்களில் இலகுவில் அன்டிபயோட்டிக் மருந்துகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றமை மற்றும் கஞ்சா, குடு போன்ற போதைப்பொருட்களின் தொடர்ச்சியான பாவனை ஆகியன மேற்கோள் காட்டப்படுகின்றன.
மன அழுத்தத்தின் தீவிர தன்மை யே தற்கொலை எண்ணங்களை தோற்றுவிக் கின்றது. மன அழுத்தத்தை ஆரம்ப கட்டத்
திலேயே கண்டறிந்து சிறந்த உளவளத் துணையின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM