கொழும்பில் பனை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் "கற்பகம்" கொழும்பு மாவட்ட விற்பனை நிலையம், செவ்வாய்க்கிழமை (04) கொழும்பு 06, வெள்ளவத்தை, பொஸ்வெல் பிளேஸில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பினால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த விற்பனை நிலையம், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் செயல்படும் பனை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமானது.
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பனை உற்பத்தியாளர்களின் பல்வேறு உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
இந்த நிகழ்வில், பனை அபிவிருத்தி மற்றும் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ர.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வாய்ப்பை முன்னிட்டு எதிர்காலத்தில் மலையகம் மற்றும் பிரபலமான சுற்றுலா தளங்களிலும் இதே போன்ற 'கற்பகம்' விற்பனை நிலையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM