நடுத்தர மக்களும் வாகனங்களை கொள்வனவு செய்யும் வகையில் வரிகளை குறைக்க வேண்டும் ; அரோச கொட்றிகோ வலியுறுத்தல்

04 Nov, 2025 | 05:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வாகன இறக்குமதி மீதான வரியை அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது. வரிகளை மீண்டும் அதிகரித்தால் சகல விதமான வாகனங்களின் விலைகள் 15 முதல் 25 சதவீதம் வரையில் உயர்வடையும். நடுத்தர மக்களும் வாகனங்களை கொள்வனவு செய்யும் வகையில் வரிகளை குறைக்க வேண்டும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் பதில் தலைவர் அரோச கொட்றிகோ வலியுறுத்தினார்.

2026  நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் குறித்து தமது நிலைப்பாட்டை குறிப்பிடுகையில் வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் பதில் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரியினால் பெரும்பாலானோரின் வாகன கனவு நிறைவேறாமல் உள்ளது. வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரியை குறைக்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். வாகன வரியை அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது.

வரிகளை மீண்டும் அதிகரித்தால் சகல விதமான வாகனங்களின் விலைகள் 15 முதல் 25 சதவீதம் வரையில் உயர்வடையும்.நடுத்தர மக்களும் வாகனங்களை கொள்வனவு செய்யும் வகையில் வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117 சதவீதத்தை பூர்த்திசெய்யக் கிடைத்திருப்பதாக இலங்கை சுங்கத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.

2025 செப்டெம்பர் 30ஆம் திகதியில் இலங்கை சுங்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 1485 பில்லியன் ரூபாய் என்றும், 1737 பில்லியனை ரூபாவை வருமானமாகப் பெற முடிந்திருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்கவின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் இலங்கை சுங்கத்தின் வருமானம் கணிசமானளவு அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.

இதற்கு அமைய 2025 ஒக்டோபர் 14ஆம் திகதியாகும் போது வாகன இறுக்குமதியால் அதிக வருமானமாக 587.11 பில்லியன் ரூபாய் கிடைத்திருப்பதாகவும்,இது ஒட்டுமொத்த வருமானத்தில் 37 சதவீதம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதன்படி கடந்த  ஒக்டோபர் 14ஆம் திகதியுடன் 55,447 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் ஊடாக 472.26 பில்லியன் ரூபாய் சுங்கவரி வருமானம் கிடைத்துள்ளது. 733 சரக்குப் போக்குவரத்து வாகனங்களின் இறக்குமதியின் மூலம் 48.67 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

ஒரு இலட்சத்து 42,524 மோட்டார் சைக்கிள் மற்றும் 15,035 முச்சக்கர வண்டிகளின் இறக்குமதியின் ஊடாக முறையே 30.3 பில்லியன் ரூபாய் மற்றும் 15.10 பில்லியன் ரூபாய் 1679 பொதுப் போக்குவரத்து பஸ் மற்றும் வேன் ரக வாகன இறக்குமதியின் ஊடாக 12.66 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05
news-image

சட்டவிரோதமாக இராமேஸ்வரத்திற்கு சென்ற இலங்கை பிரஜைக்கு...

2025-11-08 13:56:49
news-image

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் கசிப்பு...

2025-11-08 12:51:52
news-image

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில்...

2025-11-08 12:35:59
news-image

ருஹுணு பல்கலைக்கழக இணை சுகாதாரப் பீடத்தின்...

2025-11-08 12:27:42