நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று (03) இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு - மீரிகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படல்கமவிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற லொரி, எதிர் திசையில் வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது, விபத்தில் காயமடைந்த லொரியின் ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் அகரகம மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லொரியில் பயணித்த பயணிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் திவுல்தெனிய பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் தற்போது குருநாகல் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், பெலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடஹில்ல பகுதியில், பெலியத்தவிலிருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது பலத்த காயமடைந்து பெண், சிகிச்சைகளுக்காக பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில், உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் 46 வயதுடைய நகுலுகமுவ பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை-மட்டக்களப்பு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நிகவெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மதவாச்சி ஏ-09 வீதியின் 149வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் அனுராதபுரத்திலிருந்து மதவாச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் இருந்து வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சிகிச்சைக்காக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ரம்பெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மதவாச்சி பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, முருங்கன் - பரிஹரிக்கண்டல் பகுதியில், சிலாவத்துர நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி எதிர் திசையில் பயணித்த டிப்பர் லொரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, காயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் சிகிச்சைக்காக முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சிலாவத்துர பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM