களுத்துறையில் மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொரணை - பாதுக்கை வீதியில் நேற்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணையில் இருந்து பாதுக்கை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து எதிர்திசையில் வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, சிகிச்சைகளுக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM