கணவனுக்காக கஞ்சா வளர்த்த மனைவி கைது

Published By: Digital Desk 7

09 Aug, 2017 | 07:27 PM
image

கணவனுக்காக கஞ்சா செடி வளர்த்து அதனை பராமரித்து வந்த மனைவியை கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோன்வெவ வீதியில் வசித்து வரும் விவசாயப் பெண் ஒருவர் கணவனுக்காக கஞ்சா வளர்ப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த பெண்ணை கஞ்சா செடியோடு கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் வீட்டின் பின் புறத்திலுள்ள நீரோடைக்கருகில் கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். அக் கஞ்சா செடியானது 7 அடி உயரம் 7 அடி அகலமுடையது என பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் கஞ்சா சுருட்டுக்கு அடிமையானவர் என்றும் இரண்டு தடவைகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா ஒரு கிலோ கிராம் நிறையுடையது என்றும் அது காய்ந்த பின்னர் அதன் நிறை சுமார் 250 கிராம் இருக்கும் எனவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் அவரை அனுராதபுர நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரகரி ஏரி படகு சேவைகளை ஒழுங்குபடுத்த...

2026-04-20 12:51:46
news-image

கடலில் நீராடச் சென்ற நபர் நீரில்...

2026-04-20 12:49:39
news-image

1,200க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக...

2026-04-20 12:25:45
news-image

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல்...

2026-04-20 12:18:26
news-image

பலாங்கொடையில் நபரொருவர் அடித்துக் கொலை

2026-04-20 12:09:48
news-image

இந்திய வீடமைப்பு திட்டத்தை பார்வையிட்டார் இந்திய...

2026-04-20 12:08:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35