கணவனுக்காக கஞ்சா செடி வளர்த்து அதனை பராமரித்து வந்த மனைவியை கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோன்வெவ வீதியில் வசித்து வரும் விவசாயப் பெண் ஒருவர் கணவனுக்காக கஞ்சா வளர்ப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த பெண்ணை கஞ்சா செடியோடு கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் வீட்டின் பின் புறத்திலுள்ள நீரோடைக்கருகில் கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். அக் கஞ்சா செடியானது 7 அடி உயரம் 7 அடி அகலமுடையது என பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் கஞ்சா சுருட்டுக்கு அடிமையானவர் என்றும் இரண்டு தடவைகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா ஒரு கிலோ கிராம் நிறையுடையது என்றும் அது காய்ந்த பின்னர் அதன் நிறை சுமார் 250 கிராம் இருக்கும் எனவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் அவரை அனுராதபுர நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM