பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 05 சந்தேகநபர்கள் கைது !

Published By: Digital Desk 1

03 Nov, 2025 | 09:10 AM
image

கிளிநொச்சி பொலிஸ் விசேட படையின் அதிகாரிகள் குழு, ராமநாதபுரம் -  சுடளைகுளம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் குறித்து சோதனைக்குட்படுத்தியபோது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சில ஆயுதங்களுடன் வந்த குழுவினர் பொலிஸ் அதிகாரிகள்   மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், ராமநாதபுரம் பொலிஸார், குறித்த அதிகாரிகளைத் தாக்கியதற்காக 05 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் 16 முதல் 32 வயதுக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில், ராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24
news-image

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை...

2025-12-06 20:15:08
news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11