பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

Published By: Digital Desk 1

02 Nov, 2025 | 09:41 AM
image

பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால், சனிக்கிழமை (01) மோதர - லெல்லம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடமிருந்து, 26 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரை மோதர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர் மட்டக்குளி, சமித்புர பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது, அவர் பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மோதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-12-11 06:27:58
news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26