புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

01 Nov, 2025 | 05:23 PM
image

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூபா 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த நிறுவனம் மீது 30,000 ரூபா அபராதம் விதித்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறாதவாறு எச்சரிக்கையுடன் விடுவித்தார்.

இச்சோதனை நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான கோகுலன், பிரதாஸ் மற்றும் றொஜிஸ்ரன் உள்ளிட்டவர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய முச்சக்கரவண்டி...

2025-12-17 15:03:28
news-image

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-12-17 12:38:35
news-image

மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை...

2025-12-17 14:58:54
news-image

காட்டு யானை மீது மோதி இரு...

2025-12-17 14:53:44
news-image

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க...

2025-12-17 13:57:34
news-image

கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க துப்பாக்கிச்...

2025-12-17 14:45:50
news-image

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் காலவகாசம் நீடிப்பு

2025-12-17 14:11:51
news-image

பியூமி ஹன்சமாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...

2025-12-17 13:53:48
news-image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா”...

2025-12-17 12:02:04
news-image

தெமட்டகொடை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது!

2025-12-17 11:47:18
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-12-17 12:53:31
news-image

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு...

2025-12-17 11:39:03