இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் பலி!

01 Nov, 2025 | 11:14 AM
image

நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்படி, சிங்கபுர, மாத்தளை பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

வெலி ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலி ஓயா-சிங்கபுர வீதியில் உள்ள சிங்கபுர சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த இருவரும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர். 

இந்நிலையில், மாத்தளை- கொங்கவெல வீதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு அருகில் பஸ் மோதியதில் மற்றொரு பாதசாரி உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் மாத்தளை, கலுதேவல பகுதியைச் சேர்ந்த 95 வயதுடையவர் ஆவார். 

இதனையடுத்து விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .  

இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான்...

2026-03-07 05:07:47
news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23