நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, சிங்கபுர, மாத்தளை பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வெலி ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலி ஓயா-சிங்கபுர வீதியில் உள்ள சிங்கபுர சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர்.
இந்நிலையில், மாத்தளை- கொங்கவெல வீதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு அருகில் பஸ் மோதியதில் மற்றொரு பாதசாரி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மாத்தளை, கலுதேவல பகுதியைச் சேர்ந்த 95 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM