இன்றைய சூழலில் எம்முடைய குடும்ப உறுப்பினர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அல்லது மாத ஊதியம் பெறுபவர்களாக இருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகளை உயர்கல்வி கற்கவோ அல்லது திருமணம் செய்யவோ கூடுதல் நிதி தேவைப்படும்.
இத்தகைய தருணங்களில் பயன்படும் என்ற காரணத்தினால் எம்முடைய முன்னோர்கள் அரும்பாடு பட்டு சேகரித்து வைத்திருக்கும் காணியை விற்பனை செய்வதற்கு தயாராவார்கள்.
ஆனால் நினைத்தபடி காணியை விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ இயலாத சூழல் உண்டாகும். வேறு சிலருக்கு விற்பனைக்கான தொகை எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவே இருக்கும்.
இந்நிலையில் நினைத்த வகையில் காணியை விற்பனை செய்து அதனூடாக கிடைக்கும் தொகையை வைத்து எம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல காரியங்களை செய்திட வேண்டும் என்றால்... அதற்கும் எம்முடைய முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களுக்கு சொந்தமான காணியில் உள்ள மண்ணை பிடி அளவு எடுத்து, அதனை ஒரு கோப்பையில் உள்ள தண்ணீரில் கலந்திட வேண்டும். அதன் பிறகு அதனை மண் பிள்ளையாராக பிடித்து, ஒரு வெற்றிலை மீது வைத்திட வேண்டும்.
அதற்கு செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபாடு செய்தால்... உங்களுடைய காணி நீங்கள் நினைத்த வகையில் விற்பனைக்கு தயாராகும்.
தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது உங்களுடைய காணி நீங்கள் எதிர்பார்த்து தொகைக்கு விற்கும் தருணம் வரும் வரையிலோ இத்தகைய வழிபாட்டை தொடர வேண்டும்.
உங்களுடைய பூர்வீக காணி அல்லது விற்பனைக்குரிய காணியிலிருக்கும் மண்ணை மதித்து, முழுமுதற் கடவுளாக வடித்து, வணங்கினால் உங்களுடைய காணி விற்பனையாவதுடன் அதன் மீது உள்ள தோஷங்கள் அனைத்தும் மறைந்து, வீட்டில் சுப காரியம் சுபமாக நடந்தேறும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM