இன்று (நவம்பர் 1) உலக எழுத்தாளர் தினம்!
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1ஆம் திகதி உலகெங்கிலும் உலக எழுத்தாளர் தினம் கொண்டாடப்படுகிறது. மனித சமுதாயத்தின் சிந்தனை, உணர்ச்சி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை எழுத்தின் வழி அழகாகப் பதிவு செய்பவர்களே எழுத்தாளர்கள். அவர்களின் படைப்புகள் மனிதகுலத்தின் கண்ணாடியாக விளங்குகின்றன.
ஒரு எழுத்து, ஒரு வரி, ஒரு கதை கூட மனித மனதை மாற்றும் வல்லமை கொண்டது. எழுத்தாளர்கள் சமூகத்தின் குரல். அவர்கள் தங்கள் எழுத்தின் வழி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அநீதிகள் மற்றும் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் இலங்கையில் பல எழுத்தாளர்கள் எழுத்துத்துறையில் சிறந்து விளங்கிவருகிறார்கள். எழுத்தாளர்களுக்கான இந்த நாளில் ஈழத்து எழுத்தாளரும் நூலகவியலாளரும் ஆய்வாளரும் பதிப்பாளருமாக தனது 70வது அகவையில் கடந்த ஆண்டு கால்பதித்த நடராஜா செல்வராஜா போன்ற ஆளுமைகளை நினைவுகூருவது மிகுந்த பொருத்தமானது.
இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையிலும் பிற நாடுகளிலும் வெளிவந்த ஈழத்து நூல்கள், ஈழம் தொடர்பான நூல்களின் விபரங்களைத் திரட்டி, நூல் தேட்டம் எனும் பெயரில் தொகுத்து வருகிறார்.
2024ஆம் ஆண்டு வரை ஒவ்வொன்றும் ஆயிரம் நூல்கள் பற்றிய தகவல்களுடன் பதினேழு நூல் தேட்டத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும், சிங்கப்பூர், மலேசிய நாட்டு நூல்களுக்கான நூல் தேட்டத் தொகுதியொன்றும் வெளிவந்துள்ளது. “யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு” செல்வராஜா எழுதிய பல நூல்களில் ஒன்றாகும். அயோத்தி நூலக சேவைகள் என்னும் பதிப்பு முயற்சியினூடாகப் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அயோத்தி நூலக சேவைகள் 1985 முதல் 1991 வரை வெளியிட்ட நூலகவியல் காலாண்டிதழின் பிரதம ஆசிரியராகவிருந்த செல்வராஜா தற்போது இங்கிலாந்தில் வசித்துவருகிறார்.
இவர் யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ். மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கிய நாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர்.
இவரால் 1985இல் அயோத்தி நூலக சேவைகள் என்ற நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதும் நூலகங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை நிறுவன ரீதியில் வழங்குவதுமாகும்.
இவரது எழுத்துப்பணியில்,
உருமாறும் பழமொழிகள் (1988)
A Select Bibliography of Dr. James T. Rutnam (1988)
An Index to the Journal of the Royal Asiatic Society (Ceylon Branch) (1989)
கிராம நூலகப் பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டி (1989)
கிராம நூலகங்களும் அபிவிருத்தியும் (1989)
நூலகப் பயிற்சியாளர் கைநூல் (1989)
நூலக அபிவிருத்திக் கருத்தரங்கு, ஏப்ரல் 6-8, 1990: நூலகர்களுக்கான வழிகாட்டி (1990)
சனசமூக நிலையங்களுக்கான கைநூல் (1990)
ஆரம்ப நூலகர் கைநூல் (1991)
யாழ்ப்பாணப் பொது நூலகம் : ஒரு வரலாற்றுத் தொகுப்பு (2001)
நூல்தேட்டம்: தொகுதி ஒன்று (2002)
Rising from the Ashes: Tragic episode of the Jaffna Library (2003)
நூல்தேட்டம்: தொகுதி இரண்டு (2004)
நூல்தேட்டம்: தொகுதி மூன்று (2005)
நூலியல் பதிவுகள் (2005)
வாய்மொழி மரபில் விடுகதைகள் (2006)
நூல்தேட்டம்: தொகுதி 4 (2006)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8.
நூல்தேட்டத்தில் கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்: ஒரு நூல்விபரப் பட்டியல் (2007)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-8913-69-7
சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி: தொகுதி 1 (2007)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-59-6.
மலையக இலக்கிய கர்த்தாக்கள்: தொகுதி 1 (2007)
மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம்: தொகுதி 1 (2007)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-6-3
நூல்தேட்டத்தில் சிந்தனை வட்டம் (2007)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-8913-82-6.
நூல்தேட்டம்: தொகுதி 5 (2008)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
Noolthettam: An annotated bibliography of Sri Lankan Tamils (2009)- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-9-4.
நூல்தேட்டம்: தொகுதி 6 (2010)
போன்றவை உள்ளடங்கும்.
கடந்த ஆண்டு அவரின் 70ஆவது அகவை தினத்தை முன்னிட்டு கொழும்பு, குமரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருந்த அவரது சேவைநயப்பு மலரான தகைசால் நூலகர் என்ற நூலில் ஈழத்துப் பதிப்பிலக்கியத்துறைக்கு அவர் ஆற்றிவரும் அரும்பணிகள் பற்றிப் பலர் எழுதியிருக்கிறார்கள். நிறுவன கல்வித்துறை சார் அறிஞராக அல்லாமல் அகில இலங்கை ரீதியில் துறைசார் புலமைத்துவ நிறுவனங்களால் அறியப்பட்டவரும் அங்கீகரிக்கப்பட்டவருமாகத் தமிழ் புலமையாளரும் தமிழ் நூலியலாளராகவும் என்.செல்வராஜா விளங்குகிறார்.
தகைசால் நூலகர் எனும் சொல் பொதுவாக உயர் தகைமையுள்ள, அனுபவமிக்க நூலகரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. நூலியலாளர் என்.செல்வராஜாவின் சேவை அளப்பெரியதாகக் காணப்பட்டுள்ளது. இவரது நூல்தோட்டத் தொகுதிகளையும் அவரது ஏனைய நூல்களையும் நூலக வலைத்தளத்தில் பார்வையிட முடியும்.
கற்பனையின் அடித்தளம் கற்படலமாகும் கவிஞன் முருகதாஸின் கவிதையில் குறிப்பிட்டதைப் போன்று எழுதுவதற்கு கற்பனை வளம் மிகத் தேவை. அவ்வளம் எளிதில் கிடைத்துவிடாது. கடவுளின் கொடை போல அவ்வளம் பெற்ற எழுத்தாளர்கள் தமது படைப்பின் மூலம் அறிவாற்றலான சமுதாயத்தை உருவாக்கும் வகையில் செயற்படுகின்றனர். இவர்கள் போன்ற எழுத்தாளர்களின் எழுத்து பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்த எழுத்தாளர் தினத்தில் இவர்களைப் போன்ற படைப்பாற்றலாளிகளை நினைவுகூருவதும் அவர்களது எழுத்துச் சரித்திரத்தை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசேர்ப்பதும் அவசியமாகும்.
- பானுஷா நிமல்
ஊடககற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM