உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி, 13 பேர் காயம் !

Published By: Digital Desk 1

30 Oct, 2025 | 10:42 AM
image

இந்தியாவின், உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச்சில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் சுமார் 8 பேர் வரை காணாமல்போயுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் - பரதபூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கௌடியல ஆற்றில், புதன்கிழமை (29) குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது.

இந்தவிபத்தில் 60 வயதுடைய பெண் ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

லக்கிம்பூர் மாவட்டத்தின் கைரதியா கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் பரதபூருக்கு படகில் சென்றுக்கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அந்தநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீரோட்டம் அதிகமாக இருந்ததால் படகு ஆற்றில் கவிழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை தேடும்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பலை...

2025-12-11 14:03:53
news-image

மொரோக்கோ - ஃபெஸ் நகரில் இரண்டு...

2025-12-11 12:49:08
news-image

சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண...

2025-12-10 14:01:13
news-image

பாகிஸ்தானில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு...

2025-12-10 10:26:52
news-image

தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்கும் குரல்...

2025-12-09 17:08:24
news-image

ஜப்பான் நிலநடுக்கம் ; 30 பேர்...

2025-12-09 12:19:10
news-image

இந்தோனேசிய வெள்ள பேரழிவு ; உயிரிழப்பு...

2025-12-09 11:23:37
news-image

ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி...

2025-12-08 20:27:18
news-image

வடக்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவர்கள்...

2025-12-08 14:59:56
news-image

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்

2025-12-08 12:43:09
news-image

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா...

2025-12-08 11:56:01
news-image

விமானங்கள் இரத்து ;  பயணச்சீட்டு கட்டணத்தை...

2025-12-08 10:14:16