இன்றைய திகதியில் குறைவான வாழ்வாதாரம் கொண்ட திருமணமான தம்பதிகள் தங்களுடைய தாம்பத்திய உறவு குறித்த முழுமையான விழிப்புணர்வை பெற்றிருப்பதில்லை.
இதன் காரணமாக திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தை பிறக்கவில்லை என்றால்.... தங்களின் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு இருப்பதாக அவர்களே கற்பித்துக் கொள்கிறார்கள்.
இதனால் இவர்கள் அருகில் உள்ள வைத்திய சாலையில் பணியாற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர்களை தாமதமாக சந்திக்கிறார்கள். இந்நிலையில் கருப்பையகத்தில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான அறிகுறிகள் குறித்து மகப்பேறு வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.
திருமணமான பெண்களுக்கு நாட்பட்ட இடுப்பு வலி, மாதவிடாய் காலங்களில் இயல்பான அளவைவிட கூடுதலான வலி, செரிமானம் சார்ந்த குறைபாடுகள், கருத்தரிப்பதில் சிரமம், தாம்பத்திய உறவிற்கு பிறகான வலி... ஆகிய முதன்மையான அறிகுறிகளுடன் சோர்வு, முதுகு வலி, சிறுநீர் வெளியேற்றுவதில் எரிச்சல் உள்ளிட்ட சிக்கல்கள் ஆகிய அறிகுறிகள் இருந்தால்... உங்களுடைய கருப்பையகத்தில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என அவதானித்து கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து தாமதிக்காமல் அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று மகப்பேறு வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனையும் ,சிகிச்சையும் பெற வேண்டும்.
அத்துடன் அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் கருத்தரித்தல் தொடர்பாக வைத்தியர்களிடம் மருத்துவ ரீதியான ஆலோசனையும், உரையாடலையும் மேற்கொண்டால்... இயற்கையான முறையிலேயே கருத்தரிக்க இயலும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0754000012 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
வைத்தியர் சம்ஹிதா மொட்டூரி ; தொகுப்பு அனுஷா



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM