இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 49 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியாஸ் உத்தரவிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 49 பேரையும் நேற்று மாலை ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதியின் வாஸ்தலத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதாக யாழ் மாவட்ட நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 49 மீனவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய 12 மீன்பிடிப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தமிழகத்தின் தங்கச்சிமடம், புதுச்சேரி, ஜகாதாப்பட்டினம், இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM