எம்முடைய இரத்த சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதனை மேற்கொள்ள தவறினால் இதயம் , கண்கள், சிறுநீரகம், பாதம்... போன்ற பல்வேறு உறுப்புகளில் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும்.
குறிப்பாக இரத்த சர்க்கரையின் அளவை அதற்குரிய சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தவில்லை என்றால்.. இதயம் பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக இதயத்துடிப்பு - இதய ரத்த நாளங்கள் - ஆகிய பகுதிகளில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, உயிருக்கு அச்சுறுத்தலையும் உண்டாக்கும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
எம்முடைய உடலில் உள்ள ரத்த நாளங்களில் குருதியானது நீர்மை தன்மையுடன் பயணிக்கும். இதற்கு ரத்த நாளங்களின் உள் சுவற்றில் அமையப்பெற்றிருக்கும் எண்டோத்திலியம் காரணமாக உள்ளது.
இந்தத் தருணத்தில் நோயாளிகள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவில்லை என்றால் ...அவை எண்டோதிலியத்தை பாதிக்கிறது.
இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் இயல்பான அளவில் பயணிக்காமல் தடை படுகிறது. மேலும் ரத்த நாளங்களில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளின் உடல் எடை திடீரென்று குறைய தொடங்கும். இதன் எதிரொலியாக இதயத்தில் உள்ள ரத்தநாளங்களிலும் அதனுடைய செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை மருத்துவ மொழியில் டயபெடிக் கார்டியோமயோபதி என குறிப்பிடுவார்கள்.
இதுபோன்ற தருணங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களின் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு பாதிப்பு ஏதும் ஏற்படாமல்... ரத்த நாளங்களின் அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
அதனிடையே குருதி ஓட்டத்திலும் மாற்றம் உண்டாகி இருக்கும். இதனால் அவர்களுடைய இதயத்துடிப்பும் இயல்பான அளவை விட சற்று தாழ் நிலையில் சென்று விடும். சிலருக்கு இத்தகைய தருணத்தில் ரத்த அழுத்த பாதிப்பும் சம சீரற்ற நிலையில் உண்டாகி, இதய பாதிப்பை அதிகப்படுத்தி விடும்.
இந்த காரணங்களால் இதய பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனையும் மேற்கொண்டு இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான பிரத்யேக மருந்துகளும், சிகிச்சையும் நிவாரணமாக வழங்கப்படுகிறது.
வைத்தியர் சுந்தர் தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM