கொலை கலாசாரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் அரசாங்கம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

26 Oct, 2025 | 04:51 PM
image

மக்கள் ஆதரவில் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் இன்று சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். கொலை கலாச்சாரம் முழு நாட்டையும் ஆக்கிரமித்துள்ளது.  ஆனால் அரசாங்கத்தால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இரத்தினபுரி - இறக்குவானை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் ஆதரவில் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் இன்று சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். கொலை கலாச்சாரம் முழு நாட்டையும் ஆக்கிரமித்துள்ளது.  பிரதேசசபைத் தவிசாளரால் பொது மக்கள் தினத்தை கொண்டு நடத்தவோ, நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் எல்லா இடங்களிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் இயலாமையால் இந்நடவடிக்கைகளைத் தடுக்க முடியாதுள்ளது. காட்டுச் சட்டம் கோலோச்சி, பாதாள உலகக் கும்பல்கள் நாட்டை ஆளும் சூழலை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

ஆங்கில மொழியாற்றல் தொடர்பில் நான் முன்னர் பேசிய போது என்னை கேலி செய்தனர். ஆனால் இன்று சர்வதேச மாநாடுகளுக்குச் சென்று ஆங்கில மொழியில் பேசத் தெரியாமல் தடுமாற்றமடைகின்றனர். நாட்டின் கல்வி முறைமை நவீனமயமாக்கப்பட வேண்டும். உலக நாடுகளுடன் சகல துறைகளிலும் போட்டியிடுவதற்கான அறிவையும் நுட்பத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06