இலங்கை உட்பட தெற்காசிய நாடுகள் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களுக்கான தேவை வேகமாக அதிகரிப்பு – உலக வங்கி மதிப்பீடு!

Published By: Digital Desk 1

25 Oct, 2025 | 03:20 PM
image

இலங்கை உட்பட தெற்காசிய நாடுகள் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதை உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. 

AIபயன்படு அதிகரிப்பினால், பணியமர்த்தல் முறைகளைப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், AI பாவகையின் பங்கு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து.

2.9 சதவீதத்திலிருந்து இலிருந்து 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

AIஅல்லாத வேலை பட்டியல்களை விட,  75 சதவீதம் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

தெற்காசியாவில் சுமார் 22 சதவீத வேலைகள் AI க்கு உட்பட்டவை என்பத பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

இந்தப் பணிகளில் பெரும்பாலானவை – சுமார் 70 சதவீதம் - "AI- நிரப்பு" என கருதப்படுகின்றன, 

அதாவது தொழிலாளர்கள் AI ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது, அதாவது ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிபுணர்கள் ஆகியோர் இவ்வாறு AI பயனர்களாக குறிப்பிடலாம்.

சுமார் 7 சதீத வேலைகள் மட்டுமே அதிக ஆபத்துள்ளவை, குறைந்த நிரப்புத்தன்மையுடன் AI க்கு அதிக வெளிப்படும் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

ChatGPT போன்ற கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தொலைபேசி; முகவர்கள், கணக்காளர்கள் மற்றும் சரிபார்ப்பவர்கள் போன்ற பணிகளில் ஈடுபடுவோர் ஏற்கனவே வேலை இடுகைகளில் சரிவைக் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடப்பெயர்ச்சிக்கான ஆபத்து இருந்தபோதிலும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, திறன்கள், புதுமை திறன் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளில் உள்ள இடைவெளிகள் காரணமாக, தெற்காசியா மற்ற பகுதிகளை விட AI-ஐ முழுமையாகப் பயன்படுத்தத் தயாராக இல்லை என உலக வங்கி எச்சரிக்கிறது.

நேபாளம் AI-க்கு மிகக் குறைந்த சராசரி வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும், பூட்டான் மற்றும் இலங்கை அதிக வெளிப்பாடு விகிதங்களைக் காட்டுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒப்பீட்டளவில் அதிக திறமையான மற்றும் படித்த பணியாளர்களைப் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

AI-வெளிப்படும் வேலைகள், சிறந்த ஊதியம் தரும், இந்த நாடுகளில் உள்ள அனைத்து ஊதிய வருவாயிலும் 42 சதவீதமாகவுள்ளதாக உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்