கிரிஉல்ல ஸ்ரீ போதிராஜாராம விகாரையின் பெரஹெர ; வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

Published By: Digital Desk 1

25 Oct, 2025 | 10:55 AM
image

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிலுள்ள ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் வருடாந்த பெரஹெர ஊர்வலம் காரணமாக வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். 

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிலுள்ள ஸ்ரீ போதிராஜாராம ஆலயத்தின் வருடாந்த பெரஹெராவை மிகவும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த பெரஹெர ஊர்வலத்தை பார்வையிட  ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பெரஹெர ஊர்வலம், இன்று சனிக்கிழமை (25) இரவு 8 மணி முதல் நாளை காலை வரை கிரிஉல்ல நகரைச் சுற்றியுள்ள குருநாகல் - நீர்கொழும்பு பிரதான வீதியில் வலம் வர திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஊர்வலம் ஸ்ரீ போதிராஜராம விகாரையில் ஆரம்பமாகி கிரிஉல்ல நகரத்தை உள்ளடக்கிய வீதிகள் வழியாக பயணிப்பதால், குருநாகல் - கொழும்பு 05 வீதி மற்றும் குருநாகல் - நீர்கொழும்பு வீதியில் நகரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். 

எனவே, அந்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகள் :

கிரிஉல்ல - நாரம்மல பிரதான வீதியின் நாரம்மல பக்கத்திலிருந்து கொழும்பு 05 வீதியைப் பயன்படுத்த வரும் அனைத்து கனரக வாகனங்களும் தம்பெலெஸ்ஸ சந்தியிலிருந்து அலவ்வ வீதிக்குள் நுழையலாம்.

கிரிஉல்ல - நாரம்மல பிரதான வீதியின் நாரம்மல பக்கத்திலிருந்து வரும் அனைத்து இலகுரக வாகனங்களும் வீதி 5ஐப் பயன்படுத்த மஹரகம சந்தியிலிருந்து நுழைந்து அலவ்வ வீதியில் நுழையலாம்.

நீர்கொழும்பு - நாரம்மல வீதியில் கிரிஉல்ல பாலம் வழியாக கொழும்பு 05 மற்றும் மீரிகமவிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் மல்லவலான சந்தியில் அமைந்துள்ள கொடதெனியாவ வீதி வழியாக கொழும்பு 05 பிரதான வீதிக்குள் நுழையலாம்.

பன்னலயிலிருந்து கிரிஉல்ல வழியாக குருநாகல் நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஹமன்கலவிலிருந்து களனிமுல்ல சந்தி வழியாக பிரதான வீதிக்குள் நுழையலாம். அதேநேரம் நாரம்மலவிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த வீதியைப் பயன்படுத்தலாம்.

அத்தியாவசிய சேவைகளை வழங்கும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பயணிகள் பஸ்கள் மட்டுமே நகரத்தின் வழியாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20